கொரோனா சிக்கலில் சீனா: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு


ஆனால், இன்றும் இந்த மருந்துகளை தயாரிக்க இந்தியா சீனாவை நம்பியுள்ளது. மருந்துகளை தயாரிப்பதற்கான ஏ.பி.ஐ (Active Pharmaceutical Ingredients (API)) என்ற மூலப்பொருளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா.


கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக, அந்நாட்டுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏ.பி.ஐ. இறக்குமதி செய்யப்படாததால், பல நிறுவனங்கள் மருந்து உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. இதன் விளைவுகள் உலகளாவிய மருந்துகளின் விநியோகத்தில் எதிரொலிக்கிறது.